சனி, 3 பிப்ரவரி, 2024

வள்ளுவமும் வர்ணங்களும்...!

வள்ளுவமும் வர்ணங்களும்...!

எப்படி மனிதனின் ரோமம் உதிர்வது அதன் செல்களின் இறப்போ, அது போல, மாத விடாய் என்பது பெண்ணின் கருமுட்டையின் உயிரிழப்பே! இது வெறும் உணவுக்கழிவு அல்ல.. இது உயிர்க்கழிவு.. ஆகவே கோவிலில், இறப்பு தீட்டிற்கிணையான இந்த மாத விடாய் காலங்களில், பெண்கள் உலவுவது தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.. உங்கள் வீட்டுப்பூஜை அறையில் எப்படி சுத்தமாக இருப்பீர்களோ, அதை விட கோவில்களில் சுத்தமாக அவசியம். ஆன்மீகத்திற்கும் சுத்தத்திற்கும் என்ன உறவு என்று கேட்டால், மனநிம்மதிக்கும் நேர்மைக்கும் உள்ள உறவு போன்றதாகும்.

உடல் சுத்தமில்லாத அகோரிகளும், சித்தர்களும் ஆன்மீகவாதிகள் இல்லையா என்று கேட்டால், அவர்கள் கோவில், வழிபாடு, நலன் என்னும் வட்டங்களை, எல்லைகளை கடந்தவர்கள். அவர்களுக்கு கோவிலே தேவையில்லை. கடவுளை தரிசிக்க அவர்கள் உள்முகத்தேடலில் ஈடுபடுவார்கள். ஆனால் கோவில் என்பது நம் ஆன்மீக அனுபவத்தின் முதல் படி தான். ஒரு துவக்கம் தான். அங்கே சுத்தம் நிச்சயம் வேண்டும் தான். உடல் தூய்மை, உள்ளத்தின் தூய்மை அளிக்கிறது. ஏன் யாரும் பல் தேய்க்காமல் பிராணாயாமம் செய்வது இல்லை? அங்கே ஆன்மிகம் பின்னுக்கு பொய் வெறும் பயிற்சி என்கிற அனுபவமே மேலோங்கி இருக்கும்.
வர்ணம் சாதியை உருவாக்குவது இல்லை. தொழிழும் குணமுமே வர்ணத்தை உருவாக்குகின்றன.
மாறாக, சாதியை உருவாக்குவது குலம். குலத்தை உருவாக்குவது பிறப்பு. பாரத நாட்டில் இனரீதியான பிரிவுகள் இல்லை. நிற ரீதியிலான பிரிவுகளோ, வகைகளையோ இல்லை. தட்பவெப்ப நிலைக்கு தகுந்த இந்திய நிறம். தென்னிந்தியாவில் வெள்ளை வெளேரென்று இருக்கும் தூய தமிழ், கன்னடர், மலையாளிகளை அடையாளம் சொல்ல முடியும். மராட்டியத்தில் கருப்பான தூய மராட்டியரையும் காண்பிக்க முடியும். சாதிகளை ஹிந்து மதம் உருவாக்கவில்லை. ஹிந்து தர்மசாஸ்திரங்களும் சாதி பற்றி பேசவில்லை. வர்ணத்தை ஒருவன் இயல்பான குணமும் அவன் செய்யும் தொழிலும் தீர்மானிப்பதாகவே பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். நிற்க.
சனாதன தர்மத்தின் வாழ்க்கை முறையை பற்றி திருவள்ளுவர் 3 பாகமாக பிரித்துக் கூறுகிறார்..
1. அறம், 2. பொருள், 3. இன்பம். வடமொழியின் நான்மறை காட்டும் 1. தர்மம்(அறம்), 2. அர்த்தம் (பொருள்), 3. காமம் (இன்பம்) மற்றும் 4. மோட்ஷம் (வீடுபேறு).
இந்த நான்காவது பகுதியான வீடுபேறு அடையும் நிலையை பற்றி வள்ளுவர் ஊழ் என்ற அதிகாரத்தை பகிர்ந்து உள்ளார். அது இல்லரவியலிலேயே உள்ளது. சனாதன தர்மமும், தமிழரமும் ஒன்று தான் என நிரூபிக்க இந்த ஒரு ஒற்றுமையே போதும்.. ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக தன்மையாக என்னை பகிரவிடாமல் செய்தனர் போலி ID போராளிகள்..

தமிழ் வாழ்க்கை முறையும் சனாதன தர்மமும் ஒன்று தான் என்பதற்கு வள்ளுவம் கூறும் குறள்களில் இருந்தும் மேற்கோள் காட்டவியலும்..

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்."
 மேலும் மிக முக்கியமாக அந்தணரை விட மன்னர்களே அதிகாரமும், வலுமையும் மிக்கவர்களாக தமிழ் நிலத்தில் இருந்தனர் என்பதற்கு பின்வரும் குறளே சான்று...

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." 

மறுமொழிகள் இடும் போது முகமறியாய் புர்ச்சி போராளி ஒருவர் சொன்னது, பார்ப்பரவுங்க மூவேந்தரையும் ஏமாற்றி வாழ்ந்தாங்கனு.. ஆனால் வள்ளுவர் சொல்லிய மேற்கண்ட குறள் தமிழரின் சனாதன தர்மத்தில் அந்தணர் இடம் என்னவென்பதையும், அரசர் இடம் அதற்கும் மேலே என்பதையும் தெளிவாக கூறுகிறது... 

சாதிக் கொடுமைகளுக்கும் சனாதன தர்மம் காட்டிய வாழ்க்கை முறைக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை இன்னும் வலுவாக என்னால் ஆதாரத்துடன் காட்டவியலும்.. மன்னன் கோலை விட அந்தணர் சொல்லுக்கு மதிப்பு இல்லை என்ற தமிழர் நிலத்தில் மன்னரை மீறி எவ்வாறு அந்தணர் சாதிக்கொடுமைகளை நிகழ்த்த முடியும்? இன்றைக்கும் அவர்கள் 3% தானப்பா இருக்கிறார்கள்.

மன்னர்களும், அவர்களின் வாரிசுகளுமே படை நடத்தி அதிகாரம் செய்த காலத்தில் அவர்களை மீறி அந்தணர் ஒன்றும் செய்திருக்க முடியாது.. மன்னராட்சி காலம் முடிந்து முகலாய ஆட்சியில் சத்திரியர் வீழ்ந்த போதும், அதன் பிறகும் வந்த மன்னர்களின் வாரிசுகளான ஜமீன்தார்கள் ஆட்சியிலும் தீண்டாமையும், சாதிக் கொடுமைகளும் தலைவிரித்தாடிய சான்றுகள் அதிகம் கிடைக்கின்றன வரலாற்றில்.. அதன் பிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஒட்டுமொத்த பாரதமும் பஞ்சத்திலும், பட்டினியாலும் சிறையிலும் வாடியிருந்ததும், ஆண்ட சாதியினரும், பார்ப்பனர்களும், பணம் படைத்த முதலியார்களை, பிள்ளைவாள்களும், செட்டியார்களும் பிரிட்டிஷ் காலத்தில் செல்வாக்கோடு வாழ்ந்திருக்க, மற்றைய பிரிவினர் தொடர்ந்து மதம் மாற்றப்பட்டனர் என்பதே வரலாறு...

தீண்டாமை இன்றும் பேசப்படுகிறது... ஆனால் அது கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு நின்று விடுகிறதா? கிறிஸ்த்தவத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் துளியும் இல்லை. ஆனாலும் கிறிஸ்தவ நாடார், தலித் கிறிஸ்தவர் வீட்டில் பெண் கொடுப்பதில்லை.

இங்கே முதலில் சாதி அரசியல் பேசி பிராமணரை தனிமை படுத்திவிட்டால் பிறகு எல்லாரையும் ஒன்று சேர்த்து சனாதன தர்மத்தை ஒழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் சனாதன தர்மம் வாழ்வதே சத்திரியர்களாலும், வைசிய, சூத்திர வர்ணங்களாலும் தான் என்பது எந்த வெண்ணைக்கும் புரிவது இல்லை..

அந்தணர், வேதியர், மறையோர்,பார்ப்பனர் என்றெல்லாம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுவது தமிழகத்தில் மூவேந்தர்களின் ஆட்சியில் வாழ்ந்த பிராமணர்களையே.. அவர்கள் கோவில்களில் ஆகமம் கூறும் வடமொழியை பயன்படுத்தி வழிபாடு செய்வதை வைத்து அவரை தமிழர் அல்லர் என்றும் தமிழரின் வழிபாட்டு முறை வேறு என்றும் நிறுவ முயல்வோர் உண்டு... ஆனால் சனாதன தர்மத்தில் படையல் (நிவேதனம்), பூசை (அர்ச்சனை), சுடராட்டு (தீபாராதனை), குடமுழுக்கு (கும்பாபிஷேகம்), நாள், நட்சத்திரம் பார்ப்பது, ராசி, கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்வது எல்லாமும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வழக்கத்தில் இருந்து வரும் பண்பாடே.. பலவேறு தெய்வங்களுக்கும் பல்வேறு சமர்ப்பணங்கள்.. இறைச்சி, கள், சாராயம், மீன் முதல் பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என்று ஒரு சனாதனி தான் அருந்தும் உணவை படைத்தே பேரிறையை வணங்கி வந்திருக்கிறான். பலி கொடுக்கும் வழக்கமும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.. இவ்வழக்கங்கள் தமிழரிடம் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதுமே இருந்து வந்துள்ளது.. தமிழர்களின் 5 நிலங்களுக்கு கடவுளர்களாக தொல்காப்பியம் காட்டுவது, 1. இந்திரன், 2. முருகன், 3. திருமால், 4. கொற்றவை மற்றும் 5. வருணன். இவர்களை பற்றி சங்க இலக்கியங்களில் ஏராளமான தரவுகள் உள்ளன.
லிங்க வழிபாடு தமிழரின் தொல்வழிபாடு ஆகும், அதுவும் பாரதம் முழுமையும் பரந்திருந்தது என்பதற்கு ஏராளமான கோவில்களும் தொல்பொருள் ஆய்வுகுட்படுத்தப்பட்ட இடங்களும் சான்றாகின்றன..

சாதி அரசியல் எடுபடாமல் போவதற்கு இந்தப் பண்பாடே முழுமுதல் காரணம். இதை மூடப்பழக்கங்கள் என்று கூறி சிதைத்து விட்டால் இந்தியாவை முழுவதுமாக தன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடமுடியுமென்று இங்கிலாந்து பாராளுமன்றத்திலே பேசியவர் மெக்காலே எனப்படும் ஆங்கில பிரபு. பேசிய நாள் 2ம் பிப்ரவரி 1835. ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவினை முயற்சிகள் திட்டமிட்டு இவர்களால் உருவாக்கப்பட்டன..

சமஸ்க்ரிதம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வெகு மூர்க்கமாக எதிர்க்கப்டுகிறது.. அனால் மேற்கில் வலிந்து ஆராயப்படுகிறது.. குறித்து வைத்துக் கொள்ளுங்கள், நாளை அவர்களிடம் சமஸ்க்ரிதம் இருக்கும்.

முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்பதே சமஸ்கிருத சொல் தான் என்ற வாதத்திற்கு இல்லை அது தமிழ் சொல் என்று அடித்து வாதிட்டார் ஒரு தற்குரி. பொறுமையாக அவருக்கு சொல்ல வேண்டியது என்னவெனில் ஆதிபகவன் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கணத்தில் தி என்னும் ஒலிக்கு (dhi) என்னும் உச்சரிப்பு இல்லை. அதை த்தி என்று மட்டுமே சொல்லல் வேண்டும். dhi என்னும் ஒளியை கொண்டு வர நாம் அதற்க்கு முன்பாக ஒரு ந் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தியில், அந்தி மாலை, சந்தம், பந்தம், தந்தம், அந்தம் என்று எந்த தானாவுக்கும் முன்னர் ஒரு ந் சேர்த்துக்கொள்வது தான் தமிழின் ஒளியமைப்பில் வரும் இலக்கணம். அதனாலேயே தெலுகு என்று அவர்கள் சொல்வதை நாம் தெலுங்கு என்று ஒரு இங் சேர்த்து சொல்கிறோம்.

குறளில் ஆதிபகவன் என்று வருதலை நாம் காண்போம். இங்கே வசதியாக சேரல் + ஆதன் = சேரலாதன் என்று உதாரணத்தைக் கூறினார். ஆதலால் அது ஆதி என்றார். ஆதல் என்பது வேறு, ஆதி என்பது வேறு.
ஆவதால் ஆதி என்பது முழுப்பொய். ஆகுதல் என்பது ஆதியாக திரியாது. 'வானாகி' என்னும் சொல்லை 'வானாதி' என்று உச்சரிப்பது இல்லை, 'மண்ணாகி' என்பதை 'மண்ணாதி' என்றோ உச்சரிப்பது இல்லை. பொருள் மாறுபட்டு விடும்.
ஆகுதலால் ஆகின்றவன் ஆவான் தவிர ஆதியாக மாட்டான். அந்தமும் ஆதியாய் எழுதப்பட்ட முடிவும் மூலமும் தொட்டு தொடரும் இலக்கண நூலை நாம் அந்தாதி என்கிறோம். தமிழிலிலும் தனிச்சொல்லான ஆதிக்கு முதல் அல்லது மூலம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
முதலாக இருப்பவனை முதல் என்னும் சொல்லுக்கு ஈடாக ஆதி என்னும் சொல்லையும், பகவன் என்னும் சொல்லுக்கு ஈடாக ஆறு நல்ல பொருள் அமைந்தவன் என்பதே பொருள். ஞானம், வைராக்கியம், வீரியம், தனம், கீர்த்தி, அறம் ஆகிய ஆறும் எவனிடத்து ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவன். அவன் இணையாள் பகவதி. 

தொடர்வோம்

வியாழன், 28 ஜனவரி, 2021

மாவீரன் கோட்சேவும் உண்மை வன்முறையாளர்களும்

அண்மையில் முகநூலில் மாவீரன் கோட்சேவை நக்கல் செய்து ஒரு இஸ்லாமியருடன் வாதம் செய்ய நேர்ந்தது... அந்த வாதத்தின் சாரத்தை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

மகாத்மா காந்தியை கோட்சே என்கிற தீவிரவாதி சுட்டதாக சொல்லி நக்கல் செய்தார் அந்த இஸ்லாமியர். ஆனால் உண்மை என்ன? கோட்சே மறைந்து இருந்து sniper tags துப்பாக்கி மூலம் சுட்டு விட்டு தப்பித்து இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. நேருக்கு நேரே நின்று நெஞ்சில் சுட்டு விட்டு 5 மணி நேரம் நீதிமன்றத்தில் காந்தியை ஏன் கொன்றேன் என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்து விட்டு, மரணத்தை சிரித்துக் கொண்டே தொட்டவன். வீர மரணத்தை நோக்கி நிதானமாக நடந்த மாவீரன். அவன் என்ன பாயா, இல்ல விடுதலை புலியா... குண்டு வைத்து பொது மக்களை சேர்த்து கொல்ல? மக்களை நேசித்தவன்... 🔥🔥🔥

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அந்த இஸ்லாமியர், காந்தியை கொன்றது இஸ்லாமியர் என்று யாரோ கதை விட்டதாக கதை அளந்தார். இஸ்மாயில் என்றவர் கொன்றார் என்று கூறியதாக குற்றம் சாட்டினார். உண்மையில் ஹிந்துக்கள் காந்தியை இஸ்லாமியர் பேர் சொல்லி கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏன் என்றால் கோட்சே தானாக காந்தியின் முன்வந்து நேருக்கு நேராக நின்று சுட்டார். தான் தான் கொன்றதாக ஒப்புக் கொண்டார். 

மாறாக இஸ்லாம் என்ன சொல்கிறது? அரபியில் இஸ்லாம் என்பதன் பொருள் வைத்தும், அம்மதத்தின் குரான் மற்றும் ஹதீசுகள் சொல்வதையும் வைத்து பார்த்தால், இஸ்லாம் அடிபணிவின் மதம். வாளின் மதம். அது சாந்தி, சமாதானத்தை வலியுறுத்தும் மதம் அல்ல.  காபிர்களை, அதாவது அல்லா தான் ஒரே கடவுள் என்று ஏற்றுக் கொள்ளாத மக்களை நீங்கள் கழுத்தின் மேல் வெட்டுங்கள். அவர்களை மூட்டு மூட்டாக தறியுங்கள். அவர்கள் மனங்களில் திகிலை, பயத்தை உண்டு செய்யுங்கள் என்கிறார் அல்லா. இவற்றை நான் சொல்லவில்லை. இத்துடன் இஸ்லாமிய அறிஞர் ஒருவர் பேசிய காணொளி ஒன்றை ஆதாரமாக இணைத்துள்ளேன். கண்டு விழிப்புணர்வு அடைக... 



 வீடியோவை பார்த்து தெளிவாகி விட்டீர்களா.... நவகாளியிலும், பஞ்சாபிலும், மேற்கு பாகிஸ்தானிலும், கிழக்கு வங்கத்திலும் என மொத்தமாக 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று, குவித்து, 2 லட்ச இந்து மக்களை அனாதையாக இந்தியாவுக்கு துரத்தி 40 மைல் நீள தூரம் கூட்டமாக மக்கள் வரிசை மண்டி அடித்து பஞ்சாப் வழியே தாய் மண்ணை நோக்கி ஓடி வந்ததை கண்டு கடுப்பாகி, காந்தியை கொன்றார் கோட்சே. பாக்கிஸ்தான் பிரிக்கப்படும் என்றால் அது என் பிணத்தின் மீது தான் நடக்கும் என்றார் காந்தி. ஆனால் அது நடந்தது அங்கே உள்ள காபிர்கள், அதாவது நம் இந்துக்கள் கழுத்து வெட்டப்பட்டும், மூட்டு மூட்டாக தரிக்கப்படும் போது காந்தி அவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட, ஒரு எதிர்ப்பு கண்டன அறிக்கையும் தரவில்லை... ஆனால் இன்றைய பாய்கள் முகநூலிலும், டிவிட்டரிலும் வண்ணமாக உட்கார்ந்து கொண்டு RSS, பாஜக மதக்கலவரத்தை செய்வதாக சமத்துவம் பேசுவது சாத்தான் வேதம் ஒதுவது போன்றது... இந்த இஸ்லாமியர் என்னை திப்பு சுல்தான் வாரிசுகளின் வரலாற்றை படிக்க சொல்கிறார். நான் திப்புவின் வரலாற்றையே படிக்க சொன்னேன்.

திப்பு சுல்தான் ஹிந்து மக்களுக்கு செய்த அக்கிரமங்கள் குறித்து வெளியே தெரிவது இல்லை. மிக சமீபத்தில் நமது times of India நாளிதழில் வந்த புலனாய்வு கட்டுரை ஆதாரத்தின் சுட்டியை பதிவிட்டுள்ளேன்.

 காண்க. 

ஒரு தீபாவளி அன்று மேலக்கோட்டை கிராமத்தின் மொத்த உயிர்களையும் காவு வாங்கிய கயவன் திப்பு. தயவுசெய்து இங்கே தமிழ்நாட்டில் உள்ள நடுநிலை நியாயவான்கள் இதையெல்லாம் பார்த்து தங்கள் சொந்த ஜாதி பாசத்தைத் தாண்டி கொஞ்சம் ஆன்மீக பற்றை வளர்த்துக் கொண்டால் நாடு நன்றாக இருக்கும். 

முகநூல் நண்பர் திரு. Kannan Kay அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இங்கே இதை தனிப்பதிவாக இடுகிறேன்..

நன்றி..



செவ்வாய், 20 அக்டோபர், 2020

மகாபாரதம் ஒரு வழித்துணை 1

 மகாபாரதம்... 3,4 வயது இளம்பிள்ளையாக இருந்த பருவத்தில் என் மாமனின் தோள்களில் ஏறி விளையாடிய காலத்தில், அவர் எனக்கு சொன்ன பீமசேனன் பகாசுரனை கொன்ற கதையும், ஜராசந்தனை கொன்ற கதையும், கீசகனையும், இடும்பனையும் கொன்ற கதையும் என்னை மகாபாரத உலகினில் அறிமுகம் செய்தது. பீமனை போல ஒரு பேரு வீரன், காவலன் இந்த உலகில் தேவை என்று என் சிறிய உலகில் நினைக்க துவங்கினேன். பின்னாட்களில் மகாபாரத பித்தனாகி வாழ்வை புதிய புதிய பரிமாணங்களில் காணவும், சோர்ந்து போகாமல் ஓடவும் இக்கதைகள் உடன் வரும் என்றெல்லாம் நினைத்தே பார்க்கவில்லை.

1995 களில் எல்லாம் இப்போது போல இணையமோ, ஸ்மார்ட் போன்களோ இல்லை. கணிப்பொறியி்யல் பயன்பாடு 90களின் பிற்ப்பகுதியில் அதிகரித்து தெருவுக்கு தெரு browsing center கள் முளைக்க துவங்கின. ஆனாலும் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் என்பது கட்டுபடி ஆகாத விஷயம். நகரங்களில் மட்டுமே கிடைக்கும் அனுபவம். எனவே அப்போதெல்லாம் புத்தகங்கள் மட்டும் தான் எங்கள் துணை. 


துக்லக்கில் சோ அவர்கள் வாராவாரம் எழுதிய மஹாபாரதம் பேசுகிறது என்னும் தொடருக்கு நான் மிகப்பெரிய ரசிகன் ஆனேன். பீமனை பற்றி நிறைய படிக்கலாம் என்ற குஷியில் ஆர்வமாக படிக்க துவங்கினால், பீமன் மட்டும் அல்ல, அர்ஜுனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், துச்சாதனன், சகுனி, குந்தி, திரௌபதி, யுதிஷ்டிரன்,  திருதராஷ்டிரன், விதுரன் என்று வகை வகையான கதா பாத்திரங்கள் மனதை கொள்ளை கொண்டார்கள். சிறுவர் இலக்கியம் என்ற நிலையில் இருந்து பதின்ம வயதுக்கு உண்டான மனித மன கீழ்மைகள் புரிந்த வயது அது. எனவே மானுட உள்ளங்களை மகாபாரத கதை மாந்தர் மூலம் நெருங்குகையில் முற்றிலும் தெரிந்த ஆனால் புதிய உலகை அடைந்தேன். ஆயினும் பாரதம் கூறிய மானுட குலத்துக்கு தேவையான கருத்துக்களை புரிந்து கொள்ளும் வயது அல்ல அது. யார் நல்லவன்? யார் வீரன்? யார் கெட்டவன்? யார் தந்திரசாலி? என்பதான ஒரு ஒற்றை புரிதல் கொண்டு வாசிக்கையில் பாரதம் ஒன்றை தெளிவாக உணர்த்தியது. வலிமையாக இல்லாவிட்டால் இவ்வுலகில் நல்லவனாக இருப்பினும் நாய் படாத பாடு பட வேண்டும். எனவே வலிமையானவன் ஆக வேண்டும் எனில் லட்சியத்தோடு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த பதின்ம வயதில் பாரதம் என் மனதில் விதைத்தது. அர்ஜுனனை நான் மாபெரும் வீரனாக, நல் மனிதனாக, நேர் வழியில் மோதும் நியாயவானாக, கதாநாயகனாக போற்றத் துவங்கினேன். கர்ணனுக்கு அர்ஜுனன் மேல் இருக்கும் பகைமை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வெளிப்படும் தருணங்களில் கர்ணனை மிகவும் வெறுத்துள்ளேன்... காரணம் பாண்டவர்கள் பட்ட துயரங்கள் மற்றும் அவமானங்கள் என் மனதில் ஆறாத வலியை ஏற்படுத்தி இருந்தது.


என்னுடைய மேல்நிலை பள்ளிக் கல்வியை கடக்கும் போதெல்லாம் தீராத மகாபாரத பித்து தான். உடன் பழகிய நண்பர்கள் நம்மேல் பொறாமை கொண்டு நம்மை மட்டம் தட்டவும், அவர்களுக்கு கீழேயே இருந்து முகஸ்துதி செய்யவும் விரும்பிய நேரம் அது. துரியோதனன் மனநிலை கொண்ட நண்பன் ஒருவன் செல்வ செழிப்பில் வளர்ந்த, அரசியல் கட்சி பிரமுகரின் மகன் ஒருவன் அப்போது எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். அவன் பெயர் விக்கி. அவனுக்கு எங்கள் வகுப்பில் ஏகப்பட்ட எடுப்பு சோறுகள், ஜால்ரா கூட்டம். எல்லாம் ஒரே வகுப்பு தான். ஆனாலும் அவன் தன்னுடைய அணியில் புதிதாக எவனையும் சேர்க்கும் முன்னே அவனை அடித்து காயப்படுத்தி தான் பலத்தை உணர்த்திவிட்டு பின்பு தான் சேர்த்துக் கொள்வான். பிறகு புதியவனும் ஒரு ஜால்ராவாக மாற வேண்டும். இது எழுதப்படாத சட்டம். புதியவர் சேர்க்கையில் என் முறை வந்தது. நாமளாவது இறங்கி போவதாவது... நம் மனதில் தான் அர்ஜுனனும், பீமனும் குடி கொண்டுள்ளனரே... இவனுக்கு என்ன அடிபணிவது்? வாடா சும்மா யாருக்கு பவர் nu பாத்துரலாம் என்று அழைப்பு வந்தது. சரி இன்னைக்கு வருவது வரட்டும் என்று களத்தில் இறங்கி, அவன் வீட்டிற்கு அழைப்பின் பேரில் சென்று எல்லா மாணவர்கள் முன்னிலையிலும் செம அடி வாங்கி மண்ணை கவ்வியது இன்றும் நினைவில் உள்ளது. ஆனாலும் என் மனதில் இருந்த அந்த மாவீரர்கள் தோற்கவில்லை. மீண்டும் எழுந்து கவனத்துடன் மோத துவங்கினேன். இம்முறை அல்லக்கைகள் விலக்கி விடுவதை போல என் கைகளை இறுக்கி பிடித்துக் கொள்ள, வில்லன் நண்பன் விக்கி ஆவேசமாக பாய்ந்தான். அவன் எருமை போல பாய்ந்த வேகத்தை பயன்படுத்தி இந்த அல்லக்கை கூட்டத்தின் இருந்து கைகளை விடுவித்துக் கொண்டு தாறுமாறாக கைகளை சுழற்றினேன். பிரேம் ஆனந்த் என்பவன் தோட்ட குறிச்சி காரன். அவனுக்கு நாம் செய்த சம்பவத்தால் நெற்றிப் பொட்டில் ஜண்டு பாம் பாட்டில் அளவுக்கு புடைப்பு. வில்லன் விக்கியின் மூக்கில் இரத்தம். அவன் சட்டை கிழிப்பு..  மேலும் சில பல சில்லறைகளுக்கு ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள். எனக்கு நாயடி... பேயடி.. ஐந்து நிமிடங்களில் அனைத்தும் முடிந்து விட்டது. சட்டை கிழிந்து பட்டன்கள் தெரிந்து பனியன் தெரிய வெற்றி சிரிப்புடன் பீமசேனரை வணங்கி எழுந்தேன். விக்கி சொன்னான், "இன்னிக்கு தப்பிச்சிட்ட....எல்லாரும் தடுத்துட்டாங்க.. பாக்கி இருக்குடா" என்றான். ஆனால் என்னை நெருங்கி வர பயந்தான். என் வாழ்வில் நான் கண்ட துரியோதன வடிவம் அவன். 


அன்று முதல் உடல் பலத்தை விட மனவலிமை தான் பெரிது என்பதை உணர்ந்தேன். எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும் நாம் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியும் என்ற படிப்பினையை கற்றேன். மேல்நிலைக் கல்வி முடித்து வெளியே வரும் வரை பல சலசலப்புகள் விக்கி வகையராவிடம் இருந்து வந்த வண்ணமே இருந்தன.... அர்ஜுனன் எப்படி அஸ்திரங்களை அடைந்து வலிமை பெற்றானோ அப்படியே நாமும் கல்லூரியில் சேர்ந்தால் தான் கெளரவம் கிடைக்கும் என்ற உந்துதலில் தக்கி முக்கி பள்ளிக்கல்வியில் தேர்ச்சி பெற்றேன். மகாபாரதப் பித்து மட்டும் குறையவே இல்லை..


தொடரும்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

தமிழ்ச்சங்கப்பாடல்களில் ஹிந்துத்வம் - பாகம் 2


தமிழர் மரபில் ஆரியர் வந்த பின்பு ஆகமம், பூஜைகள், யாகம்,  பிரம்மன், பிராம்மணன் என்ற தமிழரல்லாத கலாச்சாரம் உள்ளெ பிராம்மணரால் புகுத்தப்பட்டது என்றும் அவை ஆரியர் தமிழரின் மீது ஆதிக்கம் செலுத்தவே உருவாக்கப்பட்டவை என்றும் சிலபல கற்பனைக்கு கதாசிரியர்கள் இப்போது நம்மிடம் பல இணைய தளங்களில் எழுத துவங்கியுள்ளனர். அதற்க்கு ஆதாரத்துடன் தமிழரிடம் இருந்தது பாரதம் முழுதும் இருந்த முறையே அன்றி வேறில்லை என்றும் ஆரியர் திராவிடர், தமிழ்க்குடிகள் போன்ற பிரிவினை தேவை இல்லை என்பதை விளக்கவுமே இந்த தொடர் சங்கப்பாடல்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி தன் தரப்பை நிறுவவுள்ளது.
   

“கந்து” என்பதும் உண்டு= கல் தூண்! கந்து/ நடுகல்லில்= குடி காத்தவர்களின் பெயர்/படம் எழுதி வைப்பதும் உண்டு!

முல்லையின் மாயோன் (திருமால்), குறிஞ்சியின் சேயோன் (முருகன்)

= இப்படித் தோன்றியவர்கள் தான்!
= ஆதி குடிகளின் இனத் தலைமை!
கந்தன் =  இவன் “ஸ்கந்தன்” அல்ல!
திருமால் =  இவன் “விஷ்ணு” அல்ல!

இவர்கள் ஆதி குடி நாட்டார் தெய்வங்கள். (பின்னாளில் சம்ஸ்கிருதம் கலந்து, புராணக் கதைகள் ஏற்றப்பட்டு, “பெரும்”தெய்வங்களாய் மாறிப் போனது அப்புறம் தான்.

சைவம்/ வைணவம் என்ற பேரே சங்கத் தமிழில் கிடையாது; “மத அமைப்பு” இல்லவேயில்லை) என்று கண்ணபிரான் ரவிசங்கர் என்னும் "ஒரு அறிஞர்" எழுதியுள்ளதைக் காண நேர்ந்தது. கடைச்சங்க காலம் = மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, “மதம்” பிடித்தது, ஜாதியும் பிடித்தது:( என்று எழுதியுள்ளார்.


 மேலோட்டமாகப் பார்த்தல் அடடே விஷயம் தெரிந்தவர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் போலிருக்கிறதே என்று தோன்றும். ஆனால் இவர் சொல்வது போல  சங்கப்பாடல்களில் சொல்லப்பட்டுள்ளபடி தமிழர்களுக்கு முருக வழிபாடும், மால் வழிபாடும் எப்படி செய்வது என்று விளக்கி சொன்னால் நலம்.. கடைச்சங்க காலத்தில் திடீரென உள்ளே பார்ப்பனீயம் உள்ளே நுழைந்தது என்பதற்கும் இடைச்சங்க காலத்தில் பார்ப்பனீயம் இல்லை என்பதற்கும் வலுவான தரவுகளை தரவும் முடியாது. இடைச் சங்க நூல்கள் எவை எவை என்றும் விளக்கினால் நலம். இந்தியாவில் எங்கேயுமே நடுகல் வைத்து வழிபடப்படவில்லை, தமிழகத்தில் மட்டும் தான் நடுகல் வழிபாடு இருந்தது என்றும் அறுதியிட்டுக் கூற முடியுமா?

சமஸ்க்ரிதம் மட்டுமே மூலத்தமிழை சிதைத்தது என்றால் இன்று நாம் பயன்படுத்தும் இந்த உரைநடை எழுத்துக்களே முற்பட்ட காலத்தில் இல்லையே, பிராமி தமிழ் எழுத்துக்கள் அல்லவா கல்வெட்டுகளில் கிடைக்கின்றன, அப்போது புதிதாக நுழைந்து நம் எழுத்திலக்கண அமைப்பை யார் திணித்தார்கள் என்று சொல்வீர்கள்? அதற்கும் பார்ப்பனர் வந்து புகுத்தினர் என்று கூறுவீர்களா? ஹிந்து மதம் என்பது இல்லை என்பதை ப்ராமணர்களுமே ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு பெயர் இல்லை, இது ஒரு பலவித தொன்ம வழிபாட்டு முறைகள் நம்பிக்கைகள், பண்பாட்டுப் பிரிவுகள், நாகரீக வளர்ச்சியினால் ஒன்றாக தாமாய் இணைந்த பெரும் ஞான மரபு மற்றும் பண்பாட்டு தொடர்ச்சி, வாழ்வியல் முறை என்று தான் உச்ச நீதி மன்றம் முதற்கொண்டு ஒத்துக்கொண்டு விட்டது. நீங்கள் இந்தக் கட்டுரையில் நிறுவ விரும்புவது ஹிந்துக்களும் தமிழர்களும் ஒன்று இல்லை என்பதா? அவ்வாரே ஆகுக.

தமிழர்களும், தெலுங்கர்களும் கன்னடர்களும், ஓரியாக்களும், அஸ்ஸாமிக்களும், காஷ்மீரிகளும் ஒன்று இல்லை என்பதுவும் உண்மையே! இவர்கள் எல்லாருமாக சேர்ந்தாலும் ஹிந்துக்கள் என்று கூறப்படக்கூடாதா? சரி, இவர்கள் அனைவரும் தத்தமது இடம்,மொழி அடிப்படையில் அவர்களின் பெயர்களின் வழங்கப்படலாம், தவறில்லை, ஆனால் இவர்களின் வழிபாட்டு முறையில் உள்ள ஒற்றுமை என்னும் கொண்டையை மறைக்க தான் எந்த நவீன பிரிவினை எழுத்தாளர்களாலும்  முடியவில்லை. தமிழனின் வழிபாட்டு முறை என்ன? சுடராட்டுதல், நீராலும் முழுக்காட்டுதல், படையல், கொடை, மலர் சொரிதல், போன்ற எளிய வழிபாட்டு முறைகள் தான். நடுகல் அமைத்து, அல்லது அல்லது சிறிய தூண்களில் சிலைகளை அமைத்து மேற்கூறிய வழிபாட்டு முறைகளை செய்தார்கள். இதையே தான் பாரதம் முழுக்க அனைத்து மொழி பேசும் ஆதி பாரத மக்கள் வழிபாட்டு முறையாக செய்து வந்துள்ளார்கள். எந்த மொழி தொன்மத்தையும் எடுத்துப்பாருங்கள் . இந்த மலராட்டு தான்  அர்ச்சனை, சுடராட்டு தான் தீபாராதனை, படையல் தான் நிவேதனம், உயிர் கொடை தான் பலி, நீராட்டலும் முழுக்காட்டலுமே அபிஷேகம். இந்த வழிபாட்டு முறைகளே இந்திய பாரதப் பண்பாட்டின் வேர். என்ன தான் மொழியை வைத்து பிரிவினை கற்ப்பித்தாலும் திருமாலை விஷ்ணு இல்லை என்று கூறினாலும், திருமாலை இன்றைய தேதியில் எப்படி வழிபடுவது என்று சங்கப்பாடல்களில் தேடினால் அது பாற்கடலில் பள்ளி கொண்டவனையே சுட்டுகிறது.

இந்த முதல் இடை சங்க நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை என்பதையே ஒரு சாதகமான அம்சமாக வைத்துக்கொண்டு கடைச்சங்கத்துல பார்ப்பனீயம் உள்ளே புகுந்து தன் பண்பாட்டை நிறுவியது என்றொரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். முதல் இடை சங்க நூல்களே இல்லையெனும் பொழுது அவற்றில் உள்ளது பாரதப் பண்பாடு என்னும் வழக்கமே இல்லைனு எப்புடி சொல்றீங்க? முருகனும், தாவீதும் ஒன்றே என்று கூறியும் கூட இணையத்தில் கட்டுரைகள் வருகின்றன.  ஆனால்  துளியும் உண்மை இருக்க வேண்டும்மல்லவா?

 பரிபாடலில் எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை,மைந்து
= வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன்,
திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி).

பரிபாடல் "வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;" என்று திருமாலை கூறிவிட்டதே! வேதத்து  மறை என்றால் வேதங்கள் கூறும் பொருளாக மறைந்திருப்பவன் என்று பொருள். உடனே இப்ப தமிழ் வேதம் எதுன்னு நாம ஒரு தனி அல்வா கிண்டியாகணுமே! ஐயோ போச்சே!


நூல்: புறநானூறு (335)
கவிஞர்: மாங்குடிக் கிழார்
திணை வாகை
துறை: மூதின் முல்லை புறநானூற்றுப் பாடலின் வரிகளை மேற்கோள் காட்டி நிவேதன முறை தமிழர்க்கு இல்லை என்று நிறுவ முயல்கிறார்கள். கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே!

அவங்க நினைவாக இட்ட = நடுகல்!
அந்த நடுகல்லைத் தான் போற்றுவோமே அன்றி…
நெல்-அரிசியைக் கொட்டி (உகுத்து),
“நைவேத்யம்” செய்யும் கடவுள், எங்களுக்கு இல்லை!

ஆனால் ஒட்டு மொத்த நடுகல் வழிபாட்டையே சிவவாக்கியர் எதிர்க்கிறார். அதற்காக தமிழன் வழிபாட்டு முறைகளுள் நடுகல் முறை இல்லை என்றாகி விடுமா?

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (496)

அது போலத்தான் இந்த மாங்குடிக் கிழார் பாடலும். அது அவர் கருத்தாகக் கொள்ள வேண்டுமேயன்றி ஒட்டு மொத்த தமிழ் குடியின் வழிபாட்டு முறையை அதைக்கொண்டு நாம் அறிய முடியாது. அப்படிப்பார்த்தால் எதுவுமே மிஞ்சாது.

தமிழ் தெய்வங்களை ஏற்கும் சிலர் தமிழ் தெய்வங்களை தம் முன்னோர், தலைவன் என்பதை அழுத்தமாகச்சொல்லி கடவுள் தன்மையைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர்.ஆனால் மேற்கண்ட இப்பாடல் மூலம் கடவுள் தன்மைக்கு நம் முன்னோர் தந்த முக்கியத்துவம் புலப்படும்.

மேலும் வடவர் திருமாலை 'விஷ்ணு' என்பர் அதன் பொருள் எங்கும்_நிறைந்தவர் என்பதாகும்.
எங்கும் நிறைந்திருக்கும் திருமாலின் தன்மையைத் தமிழன் தெளிவாக உணர்த்தியுள்ளான்.

பரிபாடலில் சொல்வது என்னவெனில்

 மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்

             - (பரி.5, 25-27)
இதில் மிக முக்கியமானது அசுரருக்கு வரம் தரும் சிவபெருமானே அவர்கள் அதை தவாறாகப் பயன்படுத்தும்போது அவர்களை அழித்த செய்தியாகும். முதலில் இந்த தேவாசுர யுத்தமென்பது ஆரிய தமிழர் யுத்தம் என்று புனைவதை நம்பக்கூடாது. இதன்மூலம்  அசுரர் என்பது  தமிழரைக் குறிப்பிடுவது என்ற விஷப் பிரச்சாரமும் முறியடிக்கப்படுகிறது.அப்படி இருந்தால் தமிழர்கள் வதைக்கப்பட்டதைப் பெருமையாக தமிழ்ப்புலவர்கள் பாடியிருப்பார்களா?

உங்களின் கட்டுரை வழிபாட்டு முறைகளும், நம்பிக்கை முறைகளும் நிறுவன மயமாக்கப்படலை எதிர்ப்பதை தடுப்பதே என்றால் எனக்கு அதில் எள்ளளவும் பிரச்சினை இல்லை. நீங்கள் திராவிடம் செய்யும் அதே விஷமத்தை அதாவது வெறும் பார்ப்பன வெறுப்பரசியலை மட்டுமே திணிக்கிறீர்கள். நிறுவனமயமாக்கலை எதிர்ப்பதென்றால் அறநிலையத் துறை என்ற பெயரில் கோவில் நிலங்களை EO போட்டு கொள்ளை அடிக்கும் கழகங்களை எதிர்த்து கட்டுரை எழுதலாம். மன்னர்களை வைத்து பார்ப்பனீயம் செழித்தது என்று அதே கிழிந்த தரவுகள் இல்லாத பல்லவியை புது ராகத்தில் எளிய முறையில் பாட முயன்றிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பாட்டில் ஏகப்பட்ட ஓட்டை உடைசல்கல், வடமொழி எப்படி இறைவனை வர்ணிக்கின்றனவோ அப்படியே தான் சங்க நூல்களும் சொல்கின்றன.  


    மேற்கண்ட படங்களை பாருங்கள். இங்கே எப்படி நடுகல்லோ அவ்வாறே வட இந்தியாவிலும் காணப்படுகிறது. யுத்தம் நிகழ்ந்த இடங்களில் அல்லது வீரன் மறைந்த இடத்தில் அவன் அல்லது அவர்களின் நினைவாக குஜராத், பாகிஸ்தான், சிந்து நிலம், மஹாராட்டிரம் ஆகிய இடங்களில் இந்த நடுகல் வழிபாடு சின்னங்கள் பெரிதும் காணக்கிடைக்கின்றன.. எனவே தமிழன் வேறு, இந்தியன் வேறு, அல்லது அன்றைய இந்தியனின் பெயரான பாரதீயன் வேறு என்று சும்மா பழைய ஜல்லியை அடிக்க வேண்டாம்.







தமிழ்ச்சங்கப்பாடல்களில் ஹிந்துத்வம் - பாகம் 1

திருக்குறளில் இருந்து சங்க இலக்கியங்களுக்கு போவோம். சனாதன தர்மத்தின் வாழ்க்கை முறையை பற்றி திருவள்ளுவர் 3 பாகமாக பிரித்துக் கூறுகிறார்.. 1. அறம், 2. பொருள், 3. இன்பம். வடமொழியின் நான்மறை காட்டும் 1. தர்மம்(அறம்), 2. அர்த்தம் (பொருள்), 3. காமம் (இன்பம்) மற்றும் 4. மோட்ஷம் (வீடுபேறு). இந்த நான்காவது பகுதியான வீடுபேறு அடையும் நிலையை பற்றி வள்ளுவர் எனோ எழுதவில்லை போலும்.. அல்லது எழுதியவை நமக்கு கிடைக்கவில்லையா எனத்தெரியவில்லை.. சனாதன தர்மமும், தமிழரமும் ஒன்று தான் என நிரூபிக்க இந்த ஒரு ஒற்றுமையே போதும்.. ஆனால் இந்த அளவுக்கு தெளிவாக தன்மையாக என்னை பகிரவிடாமல் செய்தனர் போலி ID போராளிகள்.. தமிழ் வாழ்க்கை முறையும் சனாதன தர்மமும் ஒன்று தான் என்பதற்கு வள்ளுவம் கூறும் குரல்களில் இருந்தும் மேற்கோள் காட்டவியலும்.. "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது." "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்." மேலும் மிக முக்கியமாக அந்தணரை விட மன்னர்களே அதிகாரமும், வலுமையும் மிக்கவர்களாக தமிழ் நிலத்தில் இருந்தனர் என்பதற்கு பின்வரும் குறளே சான்று... "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்." மறுமொழிகள் இடும் போது முகமறியாய் புர்ச்சி போராளி ஒருவர் சொன்னது, பார்ப்பரவுங்க மூவேந்தரையும் ஏமாற்றி வாழ்ந்தாங்கனு.. ஆனால் வள்ளுவர் சொல்லிய மேற்கண்ட குறள் தமிழரின் சனாதன தர்மத்தில் அந்தணர் இடம் என்னவென்பதையும், அரசர் இடம் அதற்கும் மேலே என்பதையும் தெளிவாக கூறுகிறது... சாதிக் கொடுமைகளுக்கும் சனாதன தர்மம் காட்டிய வாழ்க்கை முறைக்கும் துளியும் தொடர்பு இல்லை என்பதை இன்னும் வலுவாக என்னால் ஆதாரத்துடன் காட்டவியலும்.. மன்னன் கோலை விட அந்தணர் சொல்லுக்கு மதிப்பு இல்லை என்ற தமிழர் நிலத்தில் மன்னரை மீறி எவ்வாறு அந்தணர் சாதிக்கொடுமைகளை நிகழ்த்தியிருக்கவியலும்? மன்னர்களும், அவர்களின் வாரிசுகளுமே படை நடத்தி அதிகாரம் செய்த காலத்தில் அவர்களை மீறி அந்தணர் ஒன்றும் செய்திருக்க முடியாது.. மன்னராட்சி காலம் முடிந்து முகலாய ஆட்சியில் சத்திரியர் வீழ்ந்த போதும், அதன் பிறகும் வந்த மன்னர்களின் வாரிசுகளான ஜமீன்தார்கள் ஆட்சியிலும் தீண்டாமையும், சாதிக் கொடுமைகளும் தலைவிரித்தாடிய சான்றுகள் அதிகம் கிடைக்கின்றன வரலாற்றில்.. அதன் பிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சியில் ஒட்டுமொத்த பாரதமும் பஞ்சத்திலும், பட்டினியாலும் சிறையிலும் வாடியிருந்ததும், சில ஆண்ட சாதியினரும், பார்ப்பனர்களும், பணம் படைத்த முதலியார்களை, பிள்ளைவாள்களும், செட்டியார்களும் பிரிட்டிஷ் காலத்தில் செல்வாக்கோடு வாழ்ந்திருக்க, மற்றைய பிரிவினர் தொடர்ந்து மதம் மாற்றப்பட்டனர் என்பதே வரலாறு... தீண்டாமை இன்றும் பேசப்படுகிறது... ஆனால் அது கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகு நின்று விடுகிறதா? கிறிஸ்த்தவத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் துளியும் இல்லை. ஆனாலும் கிறிஸ்தவ நாடார், தலித் கிறிஸ்தவர் வீட்டில் பெண் கொடுப்பதில்லை. இங்கே முதலில் சாதி அரசியல் பேசி பிராமணரை தனிமை படுத்திவிட்டால் பிறகு எல்லாரையும் ஒன்று சேர்த்து சனாதன தர்மத்தை ஒழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் சனாதன தர்மம் வாழ்வதே சத்திரியர்களாலும், வைசிய, சூத்திர வர்ணங்களாலும் தான் என்பது எந்த வெண்ணைக்கும் புரிவது இல்லை.. அந்தணர், வேதியர், மறையோர்,பார்ப்பனர் என்றெல்லாம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுவது தமிழகத்தில் மூவேந்தர்களின் ஆட்சியில் வாழ்ந்த பிராமணர்களையே.. அவர்கள் கோவில்களில் ஆகமம் கூறும் வடமொழியை பயன்படுத்தி வழிபாடு செய்வதை வைத்து அவரை தமிழர் அல்லர் என்றும் தமிழரின் வழிபாட்டு முறை வேறு என்றும் நிறுவ முயல்வோர் உண்டு... ஆனால் சனாதன தர்மத்தில் படையல் (நிவேதனம்), பூசை (அர்ச்சனை), சுடராட்டு (தீபாராதனை), குடமுழுக்கு (கும்பாபிஷேகம்), நாள், நட்சத்திரம் பார்ப்பது, ராசி, கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்வது எல்லாமும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக வழக்கத்தில் இருந்து வரும் பண்பாடே.. பலவேறு தெய்வங்களுக்கும் பல்வேறு சமர்ப்பணங்கள்.. இறைச்சி, கள், சாராயம், மீன் முதல் பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என்று ஒரு சனாதனி தான் அருந்தும் உணவை படைத்தே பேரிறையை வணங்கி வந்திருக்கிறான். பலி கொடுக்கும் வழக்கமும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது.. இவ்வழக்கங்கள் தமிழரிடம் மட்டுமல்லாமல் பாரதம் முழுவதுமே இருந்து வந்துள்ளது.. தமிழர்களின் 5 நிலங்களுக்கு கடவுளர்களாக தொல்காப்பியம் காட்டுவது, 1. இந்திரன், 2. முருகன், 3. திருமால், 4. கொற்றவை மற்றும் 5. வருணன். இவர்களை பற்றி சங்க இலக்கியங்களில் ஏராளமான தரவுகள் உள்ளன. லிங்க வழிபாடு தமிழரின் தொல்வழிபாடு ஆகும், அதுவும் பாரதம் முழுமையும் பரந்திருந்தது என்பதற்கு ஏராளமான கோவில்களும் தொல்பொருள் ஆய்வுகுட்படுத்தப்பட்ட இடங்களும் சான்றாகின்றன.. சாதி அரசியல் எடுபடாமல் போவதற்கு இந்தப் பண்பாடே முழுமுதல் காரணம். இதை மூடப்பழக்கங்கள் என்று கூறி சிதைத்து விட்டால் இந்தியாவை முழுவதுமாக தன ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடமுடியுமென்று இங்கிலாந்து பாராளுமன்றத்திலே பேசியவர் மெக்காலே எனப்படும் ஆங்கில பிரபு. பேசிய நாள் 2ம் பிப்ரவரி 1835. ஒருங்கிணைக்கப்பட்ட பிரிவினை முயற்சிகள் திட்டமிட்டு இவர்களால் உருவாக்கப்பட்டன.. தமிழனின் அடையாளங்களை ஹிந்துத்வம் எடுத்துக்கொள்கிறதா? படையல் தான் நிவேதனம், சுடராட்டு தான் தீபாராதனை, மலராட்டு தான் அர்ச்சனை, பூசனை தான் பூஜை, உயிர்க்கொடை தான் பலி. அகண்ட பாரதத்தின் மூலை முடுக்கெல்லாம் இதே வழியில் தான் வழிபாடுகள். வழிபடும் முறைகளில் மட்டுமே ஒற்றுமை இல்லை. பாரதம் மட்டுமல்ல, தமிழன் சென்று கொடி நாட்டிய தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர் மலேசியா என்று ஹிந்து மத உருவ வழிபாடு உள்ள எல்லா இடங்களிலும் இந்த முறைகளில் தான் வழிபாடு. அப்புறம் எப்படி தமிழரின் கடவுளும், வழிபாட்டு முறையும் வேறாயிற்று?தான் என்ன உண்டு வாழ்கிறானோ அதை தான் தமிழனும், மற்ற மாநிலங்களிலுள்ள பாரதீயனும் இறைவனுக்கு படைத்தான். மிக குறைந்த பட்சமா 3000 வருஷத்துக்கு முன்னாடி தமிழன் எழுதி வைத்த ஆவணம் தான் தொல்காப்பியம். நமக்கு கிடைத்த நூல்களிலேயே மிக பழமையானது. 5 நிலங்களுக்கும் 5 கடவுளர்கள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. அந்த 5 இல் திருமாலும், சக்தியும், இந்திரனும், முருகனும், வருணனும் உண்டு. இந்த ஐவரும் வடக்கிலும் உண்டு. அப்புறம் எப்படி தமிழரின் கடவுள் வேறாயிற்று? சுடலை தான் சிவன். மாயவன் தான் கண்ணன். முருகன் தான் ஸ்கந்தன், இந்திரன், வருணன் அப்படியே அங்கும். கொற்றவையாகிய சக்திக்கு பல ரூபங்கள், பெயர்கள் இந்தியா முழுக்க! அப்புறம் எப்படிடா தமிழனுக்கு வேற வழிபாடுனு சொல்றீங்க? இந்த நடை பயணம் தான் பாத யாத்திரை. அதை அப்படியே வேளாங்ககண்ணிக்கு பாத யாத்திரை என்கிற பெயரில் லாவுவது தான் எல்லை தாண்டிய பயங்கரவாதம். மேரி மாதாவுக்கு விளக்கு பூஜை, இயேசு கிறிஸ்துக்கு முழு நேர இரவு ஜெபம் இதெல்லாம் தான் மக்களே நம் தமிழின பண்பாட்டு அடையாளங்களைச்சுட்டு, தனதாக்கிக் கொள்ளும் கேடுகெட்ட எச்சை புறம்போக்கு மாமாப்பயல்கள் வேலை... சனாதன தர்மம் 1000 கணக்கான ஆண்டுகளாகி பரவி விரிந்து வேரூன்றி நிற்கும் மா கடல். அதை கூரையிட்டு மறைக்கவியலாது..

புதன், 4 ஜனவரி, 2017

அறம், பொருள், இன்பம் - 2

சென்ற பதிவில் கூறியபடி இந்தியாவில் பெரும்பான்மையான ஹிந்துக்கள் தங்களுக்குள்ளான ஒற்றுமையை உறுதி செய்ய ஹிந்து வழிபாட்டு முறை மற்றும் வாழ்வு முறையான புருஷார்த்தங்களை பற்றி காண்போம் - அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் வள்ளுவர் நமக்கு திருக்குறளில் மூன்றாகப் பிரித்து குறள்களாக போதித்துள்ளார். திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள் அல்லது செல்வம், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். 

பண்டைய பாரதத்தில் வாழ்வு முறை சனாதன தர்மத்தின் படி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு பிரிவுகளும் தனி மனிதனின் குணத்தையும், அவன் செய்யும் கர்மத்தையும் அதாவது தொழிலையும் அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்டிருந்தது. இந்த முறை வர்ண முறை என்றழைக்கப்பட்டது. நான்கு வர்ணங்களாவன - பிராம்மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதாகும். இவற்றில் பிராம்மணர் என்போர் - வேதம் ஓதுதலும், வேதம் ஓதுவித்தல் ஆகிய தொழிலை செய்தவர்களாவர். சத்திரியர் என்போர் போர்த்தொழிலை முன்னெடுத்துச் செல்வோராவர். வைசியர் என்போர் பண்டமாற்று முறையிலும் பின்னர் நாணயங்களைக் கொண்டும் வணிகம் செய்தும் பொருளீட்டி வரி கட்டியும் வாழ்ந்து வந்தனர். சூத்திரர் என்போர் உடலுழைப்பை முதலீடாகக் கொண்டு தொழில்களை நடத்தி வந்தனர். விவசாயம், கால்நடைப்பராமரிப்பு, கட்டுமானப்பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். 

ஆயினும் இத்தொழில்கள் ஒருவரின் குணத்தினாலேயே, அவரின் விருப்பத்தின் பால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலினாலேயே வகுக்கப்பட்டு வந்தன. பிறப்பினால் அல்ல. ஆதியில் வந்த தொழில் வேட்டைத் தொழிலாக மட்டுமே இருக்க முடியும். பிறகு மீன் பிடித்தல். ஒரு வெற்றிகரமான வேடர் குலத்தலைவன் அவன் காலத்திற்குப் பிறகு அவன் சார்ந்த குடியினரைக் காக்க, புதிய வேடனைத் தேர்ந்தெடுக்க போட்டிகளும், வீர விளையாட்டுகளும் நடத்தபட்டன. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்ற மொழிக்கேற்ப பலம் பொருந்தியவர்களால் மனித இனம் ஆளப்பட்டது; காக்கப்பட்டது. ஆயினும் மனித குலம் எண்ணிக்கையில் தழைத்துப் பெருகவே, புதிய நிலப்பரப்புகளைக் கண்டறியத்  துவங்கினர். 

அப்புதிய நிலப்பரப்புகளை விவசாயத்திற்கும், கன்று வளர்ப்பிற்கும் பயன்படுத்திய மனித இனம் மேம்பட்டது. அவ்வாறு விவசாயத்தில் உற்பத்தியை உடலுழைப்பால் பெருக்கி வாழ்ந்தோரே சூத்திரர் ஆயினர். அந்நிலப்பரப்புகளை ஆளவும், அதில் பயமின்றி வாழவும், காவலுக்கு மனிதர்கள் தேவைப்பட்டனர். அவர்களே சத்திரியர் எனப்பட்டனர். மனித இனம், குலங்களாக பெருகியது. மனிதன் தன் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கிய நிலம், வான், நீர், காற்று, மற்றும் நெருப்பு ஆகியவற்றின் எல்லையின்மை கண்டு மெய்யுணர்ந்து இயற்கையில் இறையைக் கண்டான். மெய்யுணர்ந்தான், வேதங்கள் பிறந்தன. வழிபாட்டு முறைகள் தோன்றின. இறை நம்பிக்கை வளர்ந்தது. கலைகள் தோன்றின. மெய்யறிவில் இறையையும், இயற்கையையும் மனிதன் அளக்கத் துவங்கினான். அப்படி உருவானவர்களே பிராமணர்கள் எனப்பட்டனர். 


நிலப்பரப்பை முன்னிட்டு மோதல் எழுந்தது. மோதல்களால் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டது. அதன் விளைவாக மனிதன் குலங்களிடையே பொருள் பற்றாக்குறையினால் மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க வாணிபத்தைக் கண்டுபிடித்தான். பண்டமாற்று முறையில் வணிகம் துவங்கியது. யுத்தம் நின்று மனித குலங்களிடையே வாணிபம் செழித்தது. எல்லாரும் எல்லாமும் பெற்றனர். வாணிபம் செழிக்க அரசுகள் உருவாயின. சத்திரிய குலங்களில் அந்தந்த குடிகளுக்குளேயே வாரிசு முறையைக் கொண்டு வர நேர்ந்தது. வேற்று குல சத்திரியரை மற்றொரு குல சத்திரியர் அஞ்சினர். வேடராகவும், மீனவராகவும் துவங்கிய மனித இனத்தின் பயணம், அரசுகளாக விரிவடைந்தது. மொழிகள் உருவாயின. சிந்தனை விரிவடைய வேத நாகரீகம் மேலெழுந்தது. 

அறத்தின் பாற்பட்டு பொருளீட்டவும், பொருளை பேண அரசுக்கு வரி கட்டவும், உழைப்பவன் நிம்மதியாக வாழவும் அரசுகளுக்கு மனித சமூகம் எண்ணற்ற விதிகளை வகுத்தளித்தது. சமுதாயக் கட்டமைப்பில் இந்த நான்கு வர்ணங்களும் சரியான பங்களிப்பை கொடுத்து நாகரீத்தில் உயர்ந்தன. பண்பாடு சிறந்தமையால், ஆன்மிகம் சிறந்தது. ஆன்மிகம் சிறந்ததால் கலைகள் வளர்ந்தன. கலைகளினால் கலாச்சாரம் உயர்ந்தது. அன்றைய வரலாறு இன்றைய புராணங்களாகின. அறம், தன்னறம், இல்லறம், என்று வகுக்கப்பட்டது. அகம் என்றும் புறம் என்றும் நிலைத்தது. அகத்தில் தன்னறம் - ஸ்வதர்மம் என்றும் இல்லறம் - சம்சாரம் என்றும் பொதுவாக வழங்கப்பட்டது. தமிழ் நூல்களில் அகநானூறு மற்றும் புறநானூறு போன்ற அரும்பெரும் இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் என்னும் உலகப் பொது மறையில் கூறப்பட்டுள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவை வாடா மொழியில் தர்மம், அர்த்தம், காமம் என்று வழங்கப்பட்டது. நான்காவது விகுதியான வீடுபேறு வடமொழியில் மோக்ஷம் எனப்பட்டது. இவ்விகுதியை ஒருவன் வாழ்வில் உணர்ந்தால் அறிய முடியுமே அன்றி சொல்லில் இதை விவரிக்க இயலாது. எனவே தான் திருக்குறளில் வள்ளுவர் அறத்துப்பாலில் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பிரித்துக் கூறினார். வீடு பேறடைதல் என்பதை அறத்தில் நிறுவி விட்டார்.

நம்முடைய ஒற்றுமைக்கு நாம் செய்ய வேண்டியது, நம் இந்த உயர்ந்த வாழ்வு முறையைக் கொண்டு வாழ்வதே ஆகும். தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு. ஹிந்துவாக ஒன்று பட்டால் மட்டும் போதுமா? ஏனைய மதத்தினரும் இப்போது நம் நாட்டில் ஒரு அங்கமாகி விட்டார்களே, அவர்களோடும் இணக்கமாக வாழ வேண்டுமல்லவா? அதை பற்றி என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.





அறம்,பொருள், இன்பம்

 தர்மம் - அறம், அர்த்தம் - பொருள், காமம் - இன்பம், மோக்ஷம் - வீடுபேறு, இவையே சனாதன தர்மத்தில் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. நம் தமிழ் கலாச்சாரம் வேறு, ஹிந்து கலாச்சாரம் வேறு என்று சொல்பவர்கள், திராவிட மாயையில் சிக்கியவர்கள் இவ்வாறு சொல்வதுண்டு. தனித் தமிழ் தேசியம் பேசி நாட்டைத் துண்டாட நினைத்தவர்கள் உண்டு. ஆண்ட சாதியினர் செய்த அடக்கு முறையாலும், முகலாய, மேற்கத்திய கிறிஸ்தவ ஆதிக்கத்தினால் இந்த ஆரிய திராவிட மாயை நம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்க பெரிதும் உபயோகப்படுத்தப்பட்டது.

ஆண்ட சாதியினர் வர்ணாஸ்ரமத்தை தவறாக செயல் படுத்தினர். வர்ண முறையை தவறாக புரிந்து கொண்டு எளிய மக்களை வதைத்தும், தங்கள் சத்திரிய கடமையை மறந்தும், நாட்டைக் காக்கவும் மறந்தும், தங்களுக்குள் பூசலில் ஈடுபட்டும் சனாதன தர்மத்தை காற்றில் பறக்க விட்டனர். மராட்டியத்தில் வீர சிவாஜி, தமிழகத்தில் மற்றும் ஆந்திரத்தில் நாயக்க மன்னர்கள், சிந்து கரையில் சீக்கிய மன்னர்கள், ஆகியோர் முகலாயர்களை எதிர்த்து நின்றனர். ஆயினும் பெரிதாக ஒற்றுமை இல்லாத காரணத்தால் பல இடங்களில் தேவையின்றி அந்நியர் ஆளுகைக்கு உட்பட நேரிட்டது. அலெக்சாண்டரையே எதிர்த்த புருஷோத்தமனின் வீரத்தை புகழ ஆளின்றி, வெளிநாட்டு பயணிகள் இங்கே வந்து எழுதிய பயணக்குறிப்புகளைக் கொண்டு பாரதத்தின் வரலாற்றை மொத்தமாக மாற்றி சித்தரித்து போதிக்க வழி வகை செய்யப்பட்டது.

இஸ்லாமியர் அவர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட உருவ வழிபாட்டை எதிர்க்கவும், மதம் மாற்றி தங்கள் ஆளுகைக்குள் ஹிந்து மக்களை கொண்டு வரவும், கோவில்கள் இடிப்பு, விக்கிரகங்கள் உடைப்பு, நூலகங்கள் எரிப்பு, கட்டாய மத மாற்றம், வாள்முனையால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நாச வேலைகள் போன்ற அச்சுறுத்தல்களால் ஹிந்துக்களை அடக்கியும் வைத்திருந்தனர். இச்செயல்களை வரலாற்றில் விரிவாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மெய்சிலிர்த்து எழுதியுள்ளார்கள்.

1600கள்  வாக்கில் வியாபாரம் செய்து பொருளீட்ட வந்த மேற்கத்தியர்கள் - ஐரோப்பியர்கள், அதாவது பிரிட்டிஷ், டட்சு, பிரெஞ்சு, முதலான நாடுகளை சேர்ந்த மக்கள் பாரதத்தை ஒரு மிகப்பெரிய வணிக சந்தையாக பார்த்தார்கள். இங்கே இருந்த வளங்களை தங்கள் பனி நிறைந்த நாடுகளுடன் ஒப்பிட்டு இந்த நாட்டின் வளங்களை சூறையாட இங்கே உள்ள மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் விழச்செய்தார்கள். ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களையும், ஹிந்துக்களுக்குள்ளே சாதிய கட்டமைப்பில் ஒருவருக்கெதிராக மற்றொருவரை தூண்டியும் தங்கள் சுரண்டலுக்கும் செல்வச்செழிப்பிற்கும் எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொண்டனர். கிறிஸ்தவ போதனை மையங்களை துவக்கினார்கள். செயற்கையான பஞ்சங்களை உருவாக்கினார்கள். விசுவாசத்தை ஏசுவுக்கு அளித்தவர்களுக்கு கல்வியும், உணவும் தரப்பட்டது. நாடெங்கும் சமஸ்க்ரித ஆசிரியர்களுக்கு பதிலாக ஹிந்தி மொழி கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால் அப்போதைய வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இருந்த நிலச்சுவான்தார்களும், ஜமீன்தார்களும், சிற்றரசர்களும் வெள்ளையர்களுக்கு வரி கட்டி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துக்களை ஆளவே முற்பட்டனரே அன்றி சனாதன தர்மம் என்னும் பாரதத்தை இணைக்கும் பெரும் சங்கிலியை கையிலெடுக்க துணியவே இல்லை. அற்புத அறிவியல் ஆக்கங்களை நமக்கு ஆக்கியளித்த ஜெகதீஷ் சந்திரபோஸ், சத்யேந்திரநாத் போஸ், CV இராமன், மேக்நாத் சாஹா, ஸ்ரீனிவாச ராமானுஜன் போன்றாரின் அறிவை முன்னெடுத்து ஆக்கங்களை வளர்க்காமல் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்து தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்வதிலேயே குறியாய் இருந்தனர். 1857இல் சிப்பாய் கலவரம் துவங்கியதும் அதன் பிறகு தேச பக்தி வளரத் துவங்கியதும், அந்த தேச பக்தி விடுதலை போராட்டமாக மாறியதும், அப்போராட்டம் சுபாஷ்சந்திர போஸ், மோகன்தாஸ் காந்தி ஆகிய இரு வழிகளில் பயணித்ததும் நாமனைவரும் அறிவோம்.

இன்றைக்கு பாரதம் விடுதலை அடைந்து 70 வருடங்கள் ஆகப்போகின்றது. நாமனைவரும் உண்மையிலேயே ஒரு தாய் மக்கள் என்னும் உணர்வோடு இருக்கிறோமா? இந்திய விடுதலைக்காக பாடுபட்ட எண்ணற்ற தியாகிகளை உண்மையிலேயே நாம் மனதில் நினைத்து வழிபடுகிறோமா? பதில் நிச்சயம் இல்லை என்று தான் வருகிறது. வெறும் தமிழ்நாட்டை மட்டும் எடுத்துக் கொண்டால் ஆண்ட சாதிகளான முக்குலத்தோருக்கும், நாயக்கர்களுக்கும்,  வன்னியருக்கும், கௌண்டருக்கும், பெண் கொடுக்கல் வாங்கல் இருப்பது இல்லை. நாடார்களுக்குளேயே ஹிந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்ற வேறுபாடு. தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி சொல்லவே வேண்டாம்; எப்போதும் ஒருவித பாதுகாப்பின்மையுடனேயே வாழ்கிறார்கள். பிராமணர்கள் ரொம்பவே ஒதுங்கிப் போகிறார்கள். எவ்வளவுதான் துரத்தி அடிக்கப்பட்டாலும் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் இன்னொரு பிராமணன் முதல் வேலையாக அவ்விடத்தை விட்டு அகல்கிறார்கள். மற்ற சாதியினாராவது தங்கள் சாதிக்காரனுக்கு ஒரு சங்கடம் என்றால் முன்வந்து அவனை காக்க முயல்கிறார்கள். பிராமணர்கள் சுத்தம். இடை நிலை சாதிகளான முதலியார், செட்டியார், பிள்ளைமார், ஆசாரி போன்றோர் தனி தனியாக பிரிந்துள்ளார்கள். இவ்வத்தனை சாதிகளும் செயல் படுகின்றனவோ இல்லையோ தங்களுக்குள் ஒரு சங்கம் வைத்துள்ளார்கள். இந்த சாதி சங்கங்களால் ஒரு சுக்கும் பிரயோஜனம் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும் சமுதாயத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமாம். பங்களிப்பு இல்லாமல் போகட்டும். ஆனால்  பிரதிநிதித்துவம் கட்டாயம் இருக்க வேண்டும்.

இத்தனையையும் தாண்டி அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து வைக்கும் வேலையை சிறிதும் சிந்தாமல் சிதறாமல் சிறப்பாய் செய்கின்றன. தாழ்த்தப்பட்டோருக்கு காவலனாய்க் காட்டிக்கொண்டு குல்லா போட்டு ஆண்ட சாதியினரை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஹிந்து சனாதன தர்மத்தை எதிர்க்கும் மீசைக்காரர் கட்சி ஒரு புறம். ஆண்ட சாதி பெருமையை நிலை நாட்ட, தங்கள் சாதி மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்து, வடமாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமுள்ள வாக்கு வங்கியை நம்பிய மருத்துவர் கட்சி ஒரு புறம். நாம் தமிழர் தானா, இல்லை திராவிடரா, என்ற குழப்பத்திலுள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள்; நாம் திராவிடர் இல்லை, ஹிந்துக்களும் இல்லை, தமிழர் மட்டுமே என்று கோலோச்ச துடிக்கும் ஒரு கட்சி, கம்யூனிசம் என்ற நடைமுறை வாழ்வுக்கு ஒத்து வராத வறட்டு சித்தாந்தம் பேசும்  ஹிந்து எதிர்ப்புக் கட்சிகள்  இரண்டு, எதற்க்காக அரசியல் செய்ய வந்தோம் என்றே தெரியாமல் சரியாக தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னால்  வாபஸ் வாங்குபவர் கட்சி. நிலச்சுவாண்தார் வம்சாவளியில் பிறந்து காசும் வைத்துள்ளமையால் பெருமைக்கு கட்சி நடத்தும் ஒரு தஞ்சாவூர்க்காரரின் கட்சி. திரைத்துறையில் வாய்ப்பில்லை என்பதால் முதல்வராக துடிக்கும் 2 பேர் நடத்தும் கட்சிகள். இன்னும் எத்தனையோ உப்பு சப்பில்லாத உதிரிக்கட்சிகள் மற்றும் சாதிக்கட்சிகள் உண்டு.

நாமனைவரும் ஒன்று படாமல் இருப்பதற்காக இந்தக் கட்சிகளுக்கு தனித்தனியாக தனியார் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களும் உண்டு. அநேகமாக நாமனைவரும் ஒற்றுமையாக இருப்பது கிரிக்கெட் போட்டிகளின் போது மட்டுமே. IPL வந்ததால் அதற்கும் வந்தது வேட்டு. நன்றாக யோசியுங்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு தாய் மக்களாய் நம்மை இணைப்பது எது? மொழியா, இல்லை, அவை நாடு முழுதும் 100கும் மேலேயே விதவிதமாய் பேசப்படுகின்றன. மதங்களா? ம்ம்ம்ஹ்ம்... அவை தாறுமாறாகப்பிரிக்கின்றன. சாதிகளா? சத்தியமாக இல்லை. அவை ஆயிரக்கணக்கில் சிதறுண்டு போயுள்ளன. நன்றாய் யோசியுங்கள், நம்மை இணைப்பது நம் பண்பாடு. நம் கலாச்சாரம். உயரிய ஆன்மிகம் பொதிந்த நம் இயற்கையுடன் இணைந்த வழிபாட்டு முறைகள். மலைகளை, நதிகளை, காடுகளை, கடல்களை, வானை, நிலத்தை, ஒளியை, அக்கினியை வழிபடும் நம் பண்பாடு. வழிபாட்டு முறைகளுள் சிறிதாய் வேற்றுமை இருப்பினும், காஷ்மீரம் முதல் கன்யாகுமரி வரை சிவன் சிவன் தான். விஷ்ணு விஷ்ணு தான். முருகன் முருகன் தான். இந்திரன் இந்திரன் தான். கற்பூரமும், தீபமும், வித விதமான தோற்றங்களிலான விக்கிரகங்களும், பழமும், பூக்களுமான அர்ச்சனைகளும், சிறு பலிகளும், படையல்களுமே நம்மை இணைப்பது. அதை தான் நான் உயரிய பண்பாடு என்கிறேன். இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்கிறேன். உழவு, நெசவு, கைத்தறி, அறம் சார்ந்த பொருளீட்டல், கிராமம் சார்ந்த வாழ்வு, கால்நடைகளின் மீது கருணை, அனைத்தையும் இறை வடிவாய்க் காணுதல், கைகுவித்து தொழுதல், விழாக்களில் களியாட்டுகள், வீரம் சார்ந்த போர்த்தொழில், நியாயம் சார்ந்த அறச்சீற்றம், இவையே நம் பண்பாடு. ஜல்லிக்கட்டு, சிலம்பம், மல்யுத்தம், வில்யுத்தம், பளுதூக்குதல் போன்ற வீர விளையாட்டுக்கள் நம் பாரம்பரியத்தின் சிறப்புக்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் கட்டிகாத்த  இந்த அறிய பாரத பண்பாடு, அந்நியர் வருகைக்கு பிறகு பெயரிடப்பட்டது. சிந்து நதிக்கு இப்பால் வாழ்ந்த நம்மை ஹிந்துக்கள் என்றழைத்தனர். நம் வாழ்வு முறை தான் அறம்,பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்னும் தர்மார்த்த காம மோக்ஷமாகும். இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.